ஹரியானாவில் குரு கிராமில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர் தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்ட நிலையில், அவர் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதற்கு காரணம் தடுப்பூசி எடுத்துக் கொண்ட சிலரின் உயிரிழப்பு தான். ஆனால் தடுப்பூசிக்கும், உயிரிழப்புக்கும் எந்த தொடர்பு இல்லை என சில அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹரியானாவில் குரு கிராமில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர் தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்டுள்ளார். இந்தநிலையில் அவருக்கு ஜனவரி 16- ஆம் தேதி கொரோனா தடுப்புசி வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் இதுகுறித்து கூறுகையில் அவரது வீட்டில் அவர் திடீரென இறந்து இருந்ததாகக் கூறியுள்ளனர்.
ஆனால் இந்த தடுப்பூசிக்கும், அவரது உயிரிழப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தலைமை மருத்துவ அதிகாரி வீரேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து அறிந்துகொள்ள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா
குந்தலா ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 11:30 மணி அளவில் சுகாதார பணியாளர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். தடுப்பூசி பெற்றுக் கொண்ட மூன்று மணி நேரத்திற்குள் அவருக்கு மார்பு வலி ஏற்பட தொடங்கி உள்ளது. இதனை அடுத்து இவர் நிர்மல் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது .
வியாழக்கிழமை தெலுங்கானாவில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனையில் துறைத்தலைவர் உட்பட இரண்டு மூத்த மருத்துவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொண்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா
ஜனவரி 18ஆம் தேதியன்று பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 43 வயதான குரூப் டி ஊழியரான நாகராஜ், மாநில சுகாதாரத்துறை நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தடுப்பூசி பெற்றுக் கொண்டபின் இரண்டு நாட்களுக்கு பின் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
உத்தரபிரதேசம்
ஜனவரி 17ஆம் தேதியன்று உத்திரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 46 வயதான சுகாதார ஊழியர் தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளார். தடுப்பூசி எடுத்துக்கொண்டு ஒரு நாள் கழித்து அவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு இரவில் தனது வேலைகளை முடித்த பின் உறங்கச் சென்ற அவர் மூச்சு திணறல், மார்பில் சங்கடம், இருமல் போன்ற பிரச்சினை காரணமாக அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…