தந்தை, மகனுக்கு காயம் இருந்தது – சிறைக்கைதி வாக்கு மூலம்.!

கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன, சிறைக்கைதி ராஜா சிங் வாக்குமூலம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருவரின் கொலை வழக்கை  தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, இந்த வழக்கில் அடுத்தடுத்து போலீசார் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவில்பட்டி சிறைக்கைதி ராஜாசிங் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில்  கோவில்பட்டி சிறைக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் வரும்போது  அவர்களது பின்புறத்தில் காயங்கள் இருந்தன. உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மட்டுமல்லாமல் காவல்துறை நண்பர்களும்(Friends Of Police) தங்களை தாக்கியதாக ஜெயராஜ் கூறினார்.

இருவருக்கும் காயம் ஏற்பட்ட பின்புறத்தை  சுத்தப்படுத்தி சிறையில் மருந்தும் போடப்பட்டது எனவும், தன்னையும் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் பின்புறத்தில் தாக்கினர் என தெரிவித்தார். இந்நிலையில், ராஜாசிங் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதாக ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மீது எட்டு பிரிவுகளில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

IPL2024: மழையால் இன்றைய போட்டி ரத்தானது..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…

9 hours ago

காசுலாம் போச்சு .. ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியை பார்க்க டிக்கெட் புக் செய்த ரசிகர் ! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !!

சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…

13 hours ago

3 நொடியில் 100 கி.மீ ஸ்பீடு.. அசுர வேகத்தில் களமிறங்கிய BMW M 1000 XR.!

சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…

13 hours ago

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Plank exersize-பிளாங்க்  உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…

13 hours ago

மற்றவர்களை கவனிப்பது என்னோட வேலை இல்லை! விமர்சனங்கள் குறித்து இளையராஜா!

சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…

13 hours ago

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

13 hours ago