டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தற்பொழுது வரை தொடர்ந்து வரும் நிலையில், மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெறும் முக்கியமான பகுதிகளில் இரவு 11 மணி வரை இணைய சேவை துண்டிப்பை நீட்டித்து உத்தரவு.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள், மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் கடந்த குடியரசு தினத்தன்றிலிருந்து வன்முறையாக வெடித்தது, இதில் பல விவசாயிகளும் காவலர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதியே ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி உள்ளிட்ட போராட்டம் நடைபெறும் இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்பொழுது டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடங்களான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய இடங்களில் இன்று இரவு 11 மணி வரை இணைய சேவை துண்டிப்பை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…