சிதம்பரம், காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு சூரிய பிரியா என்ற 27 வயதான மனைவி உள்ளார். சூரிய பிரியா, தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் நகர கிராம நிர்வாக அதிகாரியான அசன் கபார், போலி இன்ஸ்பெக்டரான சூரிய பிரியா மீது சிதம்பர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் சூரிய பிரியா தன்னை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி சான்றிதழ் கேட்டதாக புகார் அளித்தார்.
இந்நிலையில், சீருடையுடன் வந்த அந்த சூரிய பிரியாவை காவல்துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் போலீஸ் சீருடையுடன் சென்று, தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி வழக்கு விசாரணைகளில் சிபாரிசு கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…