சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த இடைக்கால தடையை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன. அவர் மீது இது குறித்து புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது. எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது.
சமீபத்தில் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளது. இன்னும் மூன்று முதல் நான்கு சாட்சிகள் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது என விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சூரப்பா தரப்பில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தான் இருந்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு காரணம் அரியர் ஆல் பாஸ் முடிவிற்கு ஒத்துக்கொள்ளாததால் தன்னை பதவியில் இருந்து நீக்க நீதியரசர் கலையரசன் தலைமையிலான ஆணையம் அமைத்து அரசு உத்தரவிடப்பட்டது.
தற்போது, துணைவேந்தர் பதவியில் இருந்து தான் ஓய்வு பெற்று விட்டதால் நீதியரசர் கலையரசன் ஆணையம் என்னை விசாரிக்க முடியாது என சூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏற்கனவே சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த இடைக்கால தடையை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
இடைக்கால உத்தரவின்படி விசாரணை அறிக்கை நீதியரசர் கலையரசன் ஆணையம் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தால் செய்தால் அதை கொண்டு சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவிற்கு தான் தற்போது நீதிபதிகள் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…