நேற்று யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று கொண்டிருக்கையிலேயே டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் மயங்கி விழுந்தார். அதன் பின் நடைபெற்ற ஆட்டத்தில் பின்லாந்து 1-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.
போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமாகிய லிஸ்பனில் ஜூன் 11 ஆம் தேதி நள்ளிரவு யூரோ கோப்பை கால்பந்து 2020 தொடங்கியது. இந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய இரு அணிகள் மோதியது. ஆட்டம் தொடங்கிய முதல் பகுதியில் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அதன் பின்பு அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் எரிக்சன் கண் விழித்து விட்டதாகவும் மேலும் அவர் சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் டேனிஷ் கால்பந்து யூனியன் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டரை மணி நேரத்திற்கு பின்பதாக மீண்டும் இந்த ஆட்டம் தொடங்கியது. அப்பொழுது பின்லாந்து வீரர் ஜோயல் 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்துள்ளார். இதன் மூலமாக டென்மார்க் அணியை பின்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…