கோவையில் உணவுக்காக வீடுகளை உடைத்து சாப்பிடும் யானையை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உணவுக்காக அங்குமிங்கும் சுற்றி அமைந்துள்ளது. பகல் வேளையில் மக்கள் குடியிருக்க கூடிய பகுதிகளில் நுழைந்து அந்த யானை தனக்கு கிடைத்த உணவுகளை உண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனப்பகுதிக்கு மக்கள் அளித்த புகாரின் பேரில் அவர்கள் யானையை காட்டுக்குள் விரட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து காட்டுக்குள் சென்ற யானை மீண்டும் மருதமலை பகுதியிலேயே சுற்றி வந்துள்ள நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென அந்த யானை குமரன் அருகில் வசித்து வரும் செந்தில் என்பவரின் வீட்டை இடித்து அங்கிருந்து அரிசி, பருப்பு, புளி போன்ற உணவுப்பொருட்களை சாப்பிட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு அங்கேயே தங்கி இருந்த யானையை பொதுமக்கள் உதவியுடன் செந்தில்குமார் காட்டுக்குள் விரட்ட முயன்றுள்ளார். அதன்பின் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வெகு நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்டியதாக கூறப்படுகிறது. ஏதும் அசம்பாவிதம் நடைபெறும் முன்னரே யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…