கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம் – ஆந்திர அரசு அனுமதி!

ஆந்திராவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா அவர்களின் கத்தரிக்காய் லேகியத்தை கொரோனாவுக்கு மருந்தாக பயன்படுத்த தற்போது ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் பல்வேறு இடங்களிலும் கண்டறியப்பட்ட வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபட்டினம் எனும் கிராமத்தை சேர்ந்த போனிகி ஆனந்தையா எனும் ஆயுர்வேத மருத்துவர் கத்தரிக்காய் மூலம் லேகியம் தயாரித்து கொரோனாவுக்கு மருந்து அளித்து வந்துள்ளார். இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்துவதாக நம்பி மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக சென்று வாங்க தொடங்கினர். இவரது லேகியத்தை உட்கொண்ட சிலர் கொரோனவிலிருந்து உடனடியாக குணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு தகவல் தெரிந்ததை அடுத்து, ஆனந்தையா அவர்கள் தயாரித்த மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என்பது குறித்த உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக ஐசிஎம்ஆர் குழுவினரிடம் இந்த மருந்து ஒப்படைக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டது. மேலும் இந்த ஆய்வு முடிவு வெளிவரும் வரை இந்த கத்தரிக்காய் லேகியத்தை விநியோகம் செய்ய வேண்டாம் என தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இதுகுறித்து ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவ குழு, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இந்த மருந்தால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை எனவும் இவை முற்றிலும் முறையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் அந்த குழு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்போது ஆந்திர அரசு ஆனந்தையா அவர்களின் கத்தரிக்காய் லேகியத்தை மக்களுக்கு கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் கத்தரிக்காய் லேகியதுக்கு மட்டுமே அனுமதி எனவும், கண்ணில் விடக்கூடிய கத்தரிக்காய் சொட்டு மருந்துக்கு அனுமதி இல்லை எனவும் ஆந்திர மாநிலத்தில் தெரிவிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Rebekal

Recent Posts

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

23 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

42 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

1 hour ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

9 hours ago