9 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது.
உத்தரபிரதேசத்தின் சீதாபூரில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், 4-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு ஆபாச வீடியோ கிளிப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். சிறுமியின் தந்தை இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி, தனது மகள் 9 வயது சிறுமி. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் சித்தாப்பூர் கோண்ட்லாமாவ் தொகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு ஆபாச வீடியோவை காட்டி உள்ளார். சிறுமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது உடனடியாக அவர் அறையின் உள்ளே இருந்து கதவை பூட்டியுள்ளார்.
பின் வீடு திருப்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறினார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இதற்கு முன்பும் இதைப் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளனர்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…