தனது கார் வரும்போது எந்த சிக்னலையும் நிறுத்த வேண்டாம் என்று முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தல்.
பொதுவாகவே ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பயணம் மேற்கொள்ளும் போது சாலைகளில் உள்ள சிக்னல்களை நிறுத்தி அவர்களை விரைந்து செல்ல போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்வது வழக்கம் தான்.
அந்த வகையில், முதல்வர் ரங்கசாமி அவர்கள் காரில் செல்லும் போது சிக்னலை நிறுத்தி வைத்து முதல்வரை மட்டும் செல்ல காவல்துறையினர் வழி விட்டனர். இதனை அடுத்து கடும் வெயிலில் மக்கள் காத்திருப்பதை கண்ட முதல்வர் ரங்கசாமி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அழைத்து தனது கார் வரும்போது எந்த சிக்னலையும் நிறுத்த வேண்டாம் என்றும், மக்களோடு மக்களாக நின்று முறைப்படி நானும் சாலையை கடக்கிறேன், எனக்காக மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று சட்டப்பேரவைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி மக்களோடு மக்களாக சிக்கனல்களில் நின்று, முறைப்படி சாலையை கடந்து சென்றார். முதல்வர் ரங்கசாமியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…