கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்னும் மருத்துவ மாணவி பேருந்தில் பயணிக்கும் போது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. அதை தொடர்ந்து நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட நான் தயார் என்றும் சம்பளம் இல்லாமல் பணியை செய்ய தமிழக தலைமை காவலர் சுபாஷ் சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இச்சம்பவத்தில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் 16 வயது சிறுவனுக்கு திகார் சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றும் இன்னொரு குற்றவாளியான ராம்சிங் சிறையில் இருக்கும் போதே தற்கொலை செய்து கொண்டார்.
மீதம் இருக்கும் 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தனர். இவர்களது கருணை மனுக்களை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரிக்கப்பட்டார்.
இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் இருக்கும் திகார் சிறையில் தூக்கிலிடுபவர் பணிக்கு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மைய தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் விண்ணப்பித்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்தப் பணியை செய்ய விரும்புவதாகவும் இதற்காக சம்பளம் எதுவும் தரவேண்டாம் என்றும் திகார் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் சுபாஷ் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
மேலும் இவர் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன் சாலை ஓரத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்ட ஆணியை அகற்றி பிரபலம் அடைந்தார்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…