மதுரையில் 2 நாட்களாக தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் தவித்து வந்த தெரு நாயை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்த நெகிழ்ச்சியாக நிகழ்வானது அனைவர் மத்தியிலும் மனிதத்தை நினைவு கூர்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை வளர்நகர் பகுதியில் கர்ப்பமான நாய் ஒன்று தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் சிரமப்பட்டு அங்கு திரிந்தது. நாயின் வேதனையைக் கண்டு கருணையுள்ளம் கொண்ட சிலர் அதனை மீட்டு மதுரை செல்லூர் மாநகராட்சி தெருநாய் கருத்தடை கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், தெருநாயைப் பரிசோதனை செய்தனர். அதில் நாயின் வயிற்றில் 8 குட்டிகள் இருந்ததும், அதில் 4 குட்டிகள் இறந்துவிட்டதால் குட்டிப்போட முடியாமல் நாய் தவித்துள்ளது தெரியவந்தது.இதனால் உடனே தாமதிக்காமல் மருத்துவர்கள் உடனே, அறுவை சிகிச்சை செய்து, நாயின் வயிற்றில் இறந்த 4 குட்டிகளை வெளியே எடுத்தனர். அதன்பிறகு உயிருடன் இருந்த மற்ற 4 குட்டிகளையும் எடுத்து, அந்த குட்டிகளையும் அதன் தாய் நாயையும் காப்பாற்றினர்.தெரு நாய் தானே என்று நினைக்காமல் எல்லாம் உயிரும் ஒன்று தானே என்ற அப்பகுதி மக்களின் கருணை உள்ளத்தை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…