பிட்புல் உள்ளிட்ட ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

Ban on dangerous dog

Banned Dog: இந்தியாவில் சமீப காலங்களாக மனிதர்களை வீட்டில் வளர்க்கப்படும் சில ஆக்ரோஷமான நாய் இனங்கள் கடித்து உயிரிழப்புக்கு வழியை வகுக்கிறது. இந்நிலையில், பிட்புல், புல்டாக் போன்ற ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி செய்வதற்கும் மற்றும் விற்பனைக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. READ MORE – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய ஆவணம்.! மேலும், தடை செய்யப்பட்ட இனங்களுக்கு விற்பனை உரிமம் … Read more

உலகின் மிக வயதான நாய் – ரகசியத்தை பகிர்ந்துகொண்ட நாயின் உரிமையாளர்!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள க்ரீம் கேஸ் எனும் நகரில் வாழக்கூடிய டோபிக் கீத் என்னும் நாய் உலகின் மிக வயதான நாய் எனும் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த நாய்க்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி இருபத்தியோரு வயது ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ள இந்த நாயின் உரிமையாளரான கிசெலா என்பவர் இந்த நாய் குறித்து கூறுகையில், சில மாத குட்டியாக இருந்த பொழுது இந்த நாயை விலங்குகள் காப்பகத்தில் … Read more

நாய்க்கு தனது மனைவியின் பெயரை வைத்ததால், பக்கத்து வீடு பெண்ணை தீயிட்டு கொளுத்திய நபர்..!

நாய்க்கு தனது மனைவியின் பெயரை வைத்ததால், பக்கத்து வீடு பெண்ணை தீயிட்டு கொளுத்திய நபர். குஜராத்தை மாநிலத்தை சேர்ந்த நீடாபெண் சர்வையா என்பவர் தான் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்க்கு சோனு என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளார்.   இந்நிலையில், சூராபாய் பர்வத் என்பவரும் தனது மனைவியை சோனு என அழைத்து வந்த நிலையில், இந்த பெயர் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று … Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பூக்கூடை கொடுத்து வரவேற்ற நாய்..!

மேடையில் அமர்ந்திருந்தா அமித்ஷாவை பயிற்சி பெற்ற நாய் பூக்கூடை கொடுத்து வரவேற்றது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜஸ்தானில் நடைபெற்ற எல்லை  பாதுகாப்பு படை விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷாவை பயிற்சி பெற்ற நாய் பூக்கூடை கொடுத்து வரவேற்றது. அந்த நாய், விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பலத்தில் நடந்து சென்று, பூக்கூடையை வாயில் கவ்வியவாறு சென்று மேடையில் அமர்ந்திருந்த அமிதாஷ்விடம் கொடுத்து, அவருக்கு முன்பாக விரிக்கப்பட்டிருந்த வெள்ளை ரெட்டில் தலைப்பணிந்து வணக்கமிட்டது. நாயின் இந்த … Read more

அயர்லாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது நாய் பந்தை எடுத்துக் கொண்டு ஓடியதால் கிரிக்கெட் போட்டி நிறுத்தம்…!

அயர்லாந்தில் நடந்த டி 20 மகளிர் கோப்பையின் அரையிறுதிப் போட்டியின் போது நாய் பந்தை எடுத்துக் கொண்டு ஓடியதால் சிறிது நேரம் போட்டி நிறுத்தம்.  அயர்லாந்தில் நடந்த டி 20 மகளிர் கோப்பையின் அரையிறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட நாய் ஒன்று, பந்தை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளது. இதனால், கிரிக்கெட் போட்டி சற்று நேரம் நிறுத்தப்பட்டது. அதன் பின் நாய் போட்டியாளரிடம் பந்தை விட்டுவிட்டு சென்றது. நாயின் இந்த செயல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், … Read more

அதிர்ச்சி : கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை!

கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் நாய்கள், குரங்குகள், மயில்கள் ஆகிய விலங்குகளுக்கு எதிரான வதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினருக்கும், விலங்கினங்கள் மீட்பு படைக்கும் கிராம மக்கள் … Read more

கடித்த நாயை அடித்து கொன்ற தந்தை, மகன் இருவரும் கைது…!

தன்னை கடித்த அண்டை வீட்டுக்காரரின் நாயை அடித்து கொன்ற தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் கோட்டை பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த முனியசாமி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரது வீட்டிலும் நாய் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி இந்த இரண்டு நாய்களும் சண்டையிட்டுக் கொண்ட பொழுது, அதனை விலக்கி இழுத்து செல்ல முயன்ற நாகராஜை முனியசாமியின் நாய் கடித்து வைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், அவரது மகனுடன் இணைந்து மரக்கம்பு … Read more

#எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!

மதுரையில் 2 நாட்களாக தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் தவித்து வந்த  தெரு நாயை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்த நெகிழ்ச்சியாக நிகழ்வானது அனைவர் மத்தியிலும் மனிதத்தை நினைவு கூர்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை வளர்நகர் பகுதியில் கர்ப்பமான நாய் ஒன்று தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல்  சிரமப்பட்டு அங்கு திரிந்தது. நாயின் வேதனையைக் கண்டு கருணையுள்ளம் கொண்ட சிலர் அதனை மீட்டு மதுரை செல்லூர் மாநகராட்சி தெருநாய் கருத்தடை கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். … Read more

1100 கிலோமீட்டர் ரயில்! 10 மணி நேரம் மேற்கூரையில் பயணம் செய்த நாய்..!

ஆந்திர மாநிலம் ஐதராபாத் ரெயில் நிலையத்தில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த நாய்க்கும் திடீரென்று அப்படி ஒரு ஆசை வந்திருக்கிறது. மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் ரெயில்களில் ஏறி சொகுசாக செல்கிறார்கள். அவர்களுடன் ரெயிலுக்குள் ஏறினால் அடித்து விரட்டி விடுவார்கள் என்று நினைத்து இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்ட சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் மீது ஏறி மேற் கூரையில் நின்று கொண்டது. ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஹாயாக அங்கும் இங்குமாக உற்சாகமாக ஓடி விளையாடியது. … Read more