இன்றைய சமூகத்தில் பெண்களை பொறுத்தவரையில், ஆண்களை விட உயர்வான இடத்தில தான் உள்ளார்கள். பெண் என்றால் ஒதுக்கப்பட வேண்டியவள் அல்ல போற்றுதற்குரியவள், பெருமைக்குரியவள்.
பெரும்பாலான பெண்கள் இன்று கருச்சிதைவு செய்வதற்கு பயமின்றி, இப்படிப்பட்ட காரியத்தில் இறங்குகின்றனர். சிலருக்கு தங்களது உடல் பெலவீனத்தினாலும் ஏற்படுகிறது.
இந்த பதிவில் கரு சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள், மற்றும் இதனை தடுப்பதற்கான வழிகள் பற்றியும் பார்ப்போம்.
கரு சிதைவு ஏற்படுவதற்கு தாயின் உடல்நிலை மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தாயின் கர்ப்பப்பை கருவை தங்குவதற்கு ஏற்ற சக்தி இல்லாத போது கரு சிதைவு ஏற்படுவதாக மருத்துவர்கள் தங்களது ஆய்வில் தெரிவிக்கின்றனர்.
கரு சிதைவு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் கருவின் வளர்ச்சி சரியாக இல்லாத போது கரு சிதைவு ஏற்படுகிறது. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டு விடும். இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது.
மேலும், கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தலும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் அபார்சன் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது உடல் உடல் ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படும் போது நாம் சில மருந்துகளை உபயோகிக்கின்றோம். இந்த மருந்துகள் கருவை பாதித்து, கரு சிதைவு ஏற்பட வழிவகுக்கிறது.
இன்று நாகரீகம் என்கின்ற பெயரில் சமூகத்தின் செயல்பாடுகள் தலைகீழாக சென்று கொண்டிருக்கிறது. இன்று பெண்களும், மதுவுக்கும், போதை வஸ்துக்களுக்கும் அடிமையாகி இருக்கின்றனர்.
பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள். மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
பெண்கள் கருவுற்று மூன்று மாதங்களுக்கு வாகன பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…