புதுக்கோட்டை மாவட்டத்தப்பொருத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 22 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் திராவிட முண்ணேற்ற கழகம் 11 இடங்களையும், அண்ணா திராவிட முண்ணேற்ற கழகம் 8 இடங்களையும், காங்கிரஸ் , தமாகா 1 ஆகிய இடங்களைப் பிடித்தது.
திமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 13 உறுப்பினர்கள் இருந்ததால், திமுகவினருக்கே மாவட்ட தலைவராகும் வாய்ப்பு அதிகம் இருந்தது. இந்நிலையில் தான், மறைமுகத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஜெயலெட்சுமி என்பவர் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.இதில், பல லட்சம் ரூபாய்க்குக் குதிரை பேரம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியுடன் சேர்த்து மொத்தம் 13 உறுப்பினர்கள் இருந்த நிலையில் 10 வாக்குகள் மட்டுமே அந்த கூட்டணி கட்சிக்கு கிடைத்திருக்கிறது.
இதனால், விரக்தியடைந்த ஒரு சில திமுக உடன் பிறப்புகள் நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர். இந்தலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்டச் சேர்மன் வாய்ப்பு திமுக மாவட்ட பொறுப்பாளரான எம்.எல்.ஏ ரகுபதியால் தான் விட்டுப்போனதாகவும், எனவே அந்த சுவரொட்டியில், ” புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணிகள் அதிக இடங்கள் பிடித்தும், மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு மாவட்ட உறுப்பினர் 3 நபரை அதிமுகவிற்குத் தாரைவார்த்துக் கொடுத்த, தளபதியின் நம்பிக்கை நட்சத்திரம், முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளர், திருமயம் சட்டமன்ற உறுப்பினரான திரு. ரகுபதி அவர்களுக்கு நன்றி நன்றி என அச்சிடப்பட்டுள்ளது. இந்த அகிம்சை வழியில் உடன் பிறப்புகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் திமுக வினரிடையே பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…