BJP State President Annamalai [File Image]
கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கள்ளக்குறிச்சி வந்திருந்து விஷச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில்,, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இங்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. அவர் இங்கும் வாரிசு அரசியல் செய்து உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைக்கிறார்.
இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைப்பது, சஸ்பெண்ட் , இடமாற்றம் செய்வது, நெஞ்சு பதறுகிறது என அறிக்கை வெளியிடுவது ஆகியவை எங்களுக்கு தேவையில்லை. அதற்கு பதிலாக, இந்த உயிரிழப்புக்கு தொடர்பான துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். 1000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் புதிய மதுபான கொள்கையை கொண்டு வரவேண்டும்.
இதனை செய்யாவிட்டால், நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் முடிந்து பின்னர் தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பாஜக தொண்டர்கள் கோட்டையை (சென்னை ஜார்ஜ் கோட்டை) நோக்கி வருவார்கள். தற்போது சிபிசிஐடி விசாரணை தேவையில்லை. சிபிசிஐடி என்பது ஒரு தவறு நடப்பதற்கு முன்னர் தடுக்க வேண்டிய அமைப்பு. அவர்கள் இனி என்ன செய்ய போகிறார்கள். உடனடியாக இந்த வழக்கை சிபிசிடிக்கு மாற்றுங்கள் கண்டிப்பாக இந்த சம்பவத்துக்கு ஆளும் கட்சி தொடர்பு இல்லாமல் இது நடந்திருக்காது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
மின்தடை : நாளை ( ஜூலை 9 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடசென்னை மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை,…
சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி…
அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…
சென்னை : பாசனத் தொட்டிகள், குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து வண்டல்மன் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள்…
வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு : தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணிகளுக்கு…
டெல்லி: 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைய உள்ளார். பிரதமர் மோடி இன்று…