நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தருமபுரி அருகே பாலக்கோட்டில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாகவே இதுவரை ஆட்சி நீடித்தது. ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் தந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.