உங்களுக்கு தெரியுமா? குடோனிலிருந்து நீங்களே சிலிண்டரை எடுத்து வந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும்!

வீடுகளில் ஊழியர்கள் மூலமாக டெலிவரி செய்யப்படக்கூடிய சிலிண்டர்களை நேரடியாக சென்று நாமே எடுத்து வந்தால் நமக்கு 19.50 பைசா கிடைக்கும்.

தற்போதைய காலத்தில் மின்சாரம் மூலமாகவே இயங்கக்கூடிய பல அடுப்புகள் வந்தாலும், கேஸ் அடுப்பு என்பது மக்களால் விரும்பப்படுவது மட்டுமல்லாமல் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் ஒன்றாகவும் உள்ளது. மானிய விலையில் வாங்கக்கூடிய சிலிண்டர்கள் வருடத்துக்கு 12 மட்டுமே கொடுக்கப்படுகிறது, அதற்க்கு அதிகமாக தேவைப்பட்டால் சந்தை விலையில் நாம் வாங்கி கொள்ளலாம். இந்த கேஸ் அடுப்புக்கான சிலிண்டர் முதலில் நாம் வாங்கிய பின்பு தீர்ந்து விட்டது என்றால் ஒரு போன் செய்ததும் நாம் வாடிக்கையாக வாங்கி வரும் நிறுவனங்களின் ஊழியர்கள் நமது வீட்டிற்கே வந்து சிலிண்டரை கொடுத்து விட்டு செல்வார்கள். இவ்வாறு அவர்கள் டெலிவரி செய்வதற்கு 19.50 பைசா அவர்களுக்கு நமக்குத் தெரியாமல் மறைமுகமாக செல்கிறது. அதேசமயம் நீங்கள் ஆர்டர் செய்யக்கூடிய சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து குறித்த நேரத்திற்கு சிலிண்டர் டெலிவரி வரவில்லை என்றால் நீங்களே சென்று சில சமயங்களில் நேரடியாக அந்த சிலிண்டர்களை எடுத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அப்படிப்பட்ட நேரத்தில் உங்களுக்கு அந்த சம்பந்தப்பட்ட நிறுவனம் பணம் கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் சிலிண்டர் நாம் வாங்கக்கூடிய ஏஜென்சியின் குடோனில் இருந்து நாமே சென்று சிலிண்டரை எடுத்து வரும் பொழுது அதற்காக நமக்கு 19.50 ரூபாய் வழங்கப்பட வேண்டும். இந்த தொகை சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படும் போதே டெலிவரி கட்டணமாக அதனுடன் நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. ஆனால் நாம் டெலிவரி ஊழியர்கள் மூலம் வாங்காமல் நேரடியாக சென்று எடுக்கும் பொழுது இந்த பணம் நமக்கு கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இந்த பணம் நமக்கு கொடுக்கப்படவில்லை என்றால் 18002333555 இந்த எண்ணில் தொடர்பு கொண்டும் நாம் புகார் அளிக்கலாம்.

Rebekal

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

1 hour ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

1 hour ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

1 hour ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

2 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

2 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

2 hours ago