மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினராக துணை முதல்வரின் மகன் ரவீந்தர்நாத் எம்பி தேர்வாகியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்த நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் விலகியதால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர்நாத் குமார் எம்பி மற்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 2 பேரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி, மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு இதுவரை ரூ.12 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் மூலம் சுற்றுச்சுவர் மட்டுமே அங்கு கட்டப்பட்டுள்ளது. அதை தவிர்த்து வேறு எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. கடன் தருவதில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை தாமதம் செய்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தத நிலையில், தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினராக ரவீந்தர்நாத், மாணிக்கம்தாகூர் தேர்வாகியுள்ளனர்.
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…
Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…
Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின்…
Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும்…