2020-ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் 9 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2020-ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வகுப்புக் கலவரம், நமது தேசத்தின் குடிமக்கள் மத்தியில் சகோதரத்துவ உணர்வுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வகுப்புவாத கலவரங்கள் பொது சீர்கேட்டின் மிகவும் வன்முறை வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. குற்றவாளிகளின் செயல்கள் நாட்டின் சமூக கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது, மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியது மற்றும் சமூகத்தில் உள்ள மத நல்லிணக்கத்தை பாதிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியது.
இதனிடையே, டெல்லி கலவர வழக்கில் மார்ச் 13 அன்று, குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசுத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், டெல்லி கலவர வழக்கில் 9 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது டெல்லி நீதிமன்றம்.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 436 (வீடு போன்றவற்றை அழிக்கும் நோக்கத்துடன் தீ அல்லது வெடிமருந்து மூலம் தீங்கு செய்தல்) தண்டனைக்குரிய குற்றத்திற்காக அனைத்து குற்றவாளிகளும் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு குற்றவாளியும் ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…