கடந்த சில நாட்களாக இந்தியாவின் வட மாநிலங்கள் பதற்றமான நிலையில் இருந்து வருகிறது.இதற்கு காரணம் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகும்.இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.கடுமையான விவாதங்களும் நடைபெற்றது.இறுதியாக மசோதா நிறைவேறியது.பின்பு குடியரசு தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டார்.
ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் உள்ள மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது.குறிப்பாக அசாம்,திரிபுரா,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது.இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக டெல்லியில் உள்ள நியூ ப்ரண்ட்ஸ் காலனியில் நடைபெற்ற போராட்டத்தில் 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்த போராட்டத்தில் பாஜக போலீசாரே பேருந்துகளுக்கு தீ வைத்தனர் என்று டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிஷோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் இது பாஜகவின் மோசமான அரசியலுக்கு மிகப்பெரிய சான்று என்றும் தெரிவித்துள்ளார்.
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…