டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதி.
டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களை கைப்பற்றிய நிலையில், பாஜக தொடர்ந்து பின்தங்கியுள்ளது. அதாவது, டெல்லி மாநகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில், ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று, 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதுபோன்று, பாஜக 85 வார்டுகளில் வெற்றி பெற்று, 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 5-ல் வெற்றி, 5-ல் முன்னிலை, சுயேச்சை வேட்பாளர்கள் 1-ல் வெற்றி பெற்று 3-ல் முன்னிலை பெற்றுள்ளனர்.
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், கிட்டத்தட்ட டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்தமுறை ஆம் ஆத்மி வசம் வருகிறது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…