தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக கால்நடை மருத்துவர் பிரியங்கா மருத்துவமனையிலிருந்து வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரியங்கா.மீண்டும் அன்று மாலை கால்நடை ஒன்று அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியும் பிரியங்கா வீடு திரும்பவில்லை இதைத் தொடர்ந்து பிரியங்கா பெற்றோர் மாதப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் பிரியங்காவை போலீசார் அன்று இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். இது தொடர்ந்து ரங்காரெட்டி மேம்பாலத்திற்கு கீழ் இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் இருப்பதாக சாய் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் பிரியங்கா குடும்பத்தினரிடம் தகவல் கொடுத்து வரவைத்து அந்த உடலை அவர்களிடம் காட்டியுள்ளனர். அது பிரியங்கா என குடும்பத்தார்கள் உறுதி செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட தெரியவந்தது.
இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் , கிளீனர் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பிரியங்கா வீட்டிற்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் செல்லாத நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
இதனால் நெட்டிசன்கள் பலர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டி வருகின்றனர்.பலர் ஆறுதல் கூற செல்லாத சந்திரசேகர ராவ்வை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…