புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு

MS Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் தோனி போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இருந்து வருகிறார். தோனிக்கு 42 வயதாகும் நிலையில் கடந்த சீசனில் கோப்பை வாங்கிய பிறகு ரசிகர்களுக்கு பிரியா விடை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரசிகர்களின் ஆசைக்காக மீண்டும் ஒரு முறை விளையாட இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி, தற்போது அதிலிருந்து மீண்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் தோனி பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்த புதிய சீசனுக்காகவும் புதிய பொறுப்புக்காகவும் என்னால் காத்துக் கொண்டிருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Read More – Ranji Trophy : அரை இறுதியில் படு தோல்வி அடைந்த தமிழ்நாடு ..! இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற மும்பை ..!

எதனால் இப்படியொரு பதிவை தோனி போட்டுள்ளார் என்று சமூகவலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. தோனி முதல் போட்டியில் விளையாடி விட்டு பிறகு பயிற்சியாளராக மாற வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு சாராரோ, தோனியின் பதிவு  விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஏற்கனவே டி20 உலக கோப்பையின் போது இதுபோன்று தோனி ஒரு விளம்பர யுக்தியை பயன்படுத்தியதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

Recent Posts

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

5 mins ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

11 mins ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

1 hour ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

1 hour ago

மனித மூளையில் நியூராலிங்க் சிப்… மிக பெரிய முன்னேற்றம்.! மஸ்க் அறிவிப்பு.!

சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின்…

1 hour ago

இது ரொம்ப முக்கியம் கண்ணா! பயோபிக் படத்திற்கு இளையராஜா போட்ட முக்கிய கண்டிஷன்?

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி…

1 hour ago