பிரியங்கா காந்தியை அரசு பங்களாவில் இருந்து காலி செய்ய உத்தரவு.! லக்னோவில் குடியேற்றம்.!

டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து பிரியங்கா காந்தியை காலி செய்ய கோரி உத்தரவிட்டதை அடுத்து உ. பி-யின் லக்னோவில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி தங்கி வந்த அரசு பங்களாவை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும், ரூ. 3.46 லட்சம் வீட்டு பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்காக செலுத்த வேண்டும் என்று மத்திய நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது டெல்லியில் பிரியங்கா காந்தி வசித்து வரும் லோதி பங்களாவை காலி செய்ய முடிவு செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவிற்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. கோகலே மார்க்கில் உள்ள ஷீலா கவுலுக்கு சொந்தமான வீட்டில் தங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 2015-ல் காலமான கவுல் இந்தியாவின் முதல் பிரதமரும், பிரியங்காவின் பெரிய தாத்தாவுமான ஜவஹர்லால் நேருவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. கவுல் ஒரு காலத்தில் மத்திய அமைச்சராகவும், ஆளுநராகவும் இருந்துள்ளார்.

மேலும் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் போது செயலாளராக இருப்பதால் லக்னோவில் குடியேறுவதன் மூலம் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியும் என்று கணித்து முடிவு செய்துள்ளார். தற்போது பிரியங்கா தனது லோதி பங்களாவில் உடமைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்ததும் லக்னோவிற்கு குடியேறுவார் என்று கூறப்படுகிறது.

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

4 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

4 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

4 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

4 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

5 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

5 hours ago