வாக்கு எண்ணிக்கை: நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம்.!!

சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்று தகவல். 

தமிழம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 71.79% வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேறப்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக, மநீம ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டது. புதுச்சேரியில் என்.ஆர். காங்- அதிமுக- பாஜக ஒரு அணியாகவும் திமுக- காங் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. கேரளாவில் 140 தொகுதிகளில் ஆளும் இடது முன்னணி- காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக ஆகியவை தேர்தலில் களம்கண்டுள்ளனர்.

இதுபோன்று அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மெகா கூட்டணியை உருவாக்கி சவாலாக களத்தில் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் இடையே போட்டி நிலவுகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி ?

Watermelon milk shake-  தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…

14 mins ago

பாரம்பரியமிக்க பானக்கத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான்  நம் ஊர்களில் திருவிழாக்கள்,…

1 hour ago

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

1 hour ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

2 hours ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

2 hours ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

2 hours ago