சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்தவகையில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி கோரியுள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்த போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐபிஎல் தலைவர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். அந்தவகையில், செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள், நவம்பர் 10 -ம் தேதி அன்று நிறைவுபெறுகிறது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசிசிஐ பல விதிகளை அறிவித்தது. அதன்படி, ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள 8 அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் 4 முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா நெகட்டிவ் என வந்தால் மட்டுமே தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தல தோனிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்தால், அவர் பயிற்சிக்கு நாளை சென்னை புறப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…