அமெரிக்கா முழுவதும், ஜூலை மாத கடைசி இரண்டு வாரங்களில் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், அமெரிக்கா முழுவதும் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
அமெரிக்காவின் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஜூலை மாத கடைசி இரண்டு வாரங்களில் அமெரிக்கா முழுவதும் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதுமட்டுமின்றி, ஜூலை 16 -ம் தேதி முதல் 30 வரை 97,078 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அது வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகமானது என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 1,00,000 குழந்தைகளில் 447 குழந்தைகளுக்கு கொரோனா உறுதியாகும் எனவும், மொத்த மாநிலங்களில் நடத்தப்படும் சோதனைகளில் 3 முதல் 11.3 சதவீத குழந்தைகள் உள்ளனர்.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளில் 3.6 சதவீதம் முதல் 18.4 சதவீத பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. மருத்துவமனையில் 0.6 சதவீதம் முதல் 3.7 சதவீதம் வரை குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 0 முதல் 0.8 சதவீத குழந்தைகள் வரை உயிரிழந்து வருவதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…