மருத்துவமனைகளில் தனக்கு படுக்கை வசதி இல்லாமல் அனுமதிக்கப்படாததால் விரக்தியில் கொரோனா பாதித்த பெண்மணி தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியா முழுவதிலும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநில அரசுகள் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை வழங்க முடியாமல் திணறி வருகிறது. மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் மற்றும் தேவையான உபகரணங்களும் இல்லாமல் மருத்துவர்கள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் புனேவில் உள்ள 41 வயதுடைய பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நிலையில் பல்வேறு மருத்துவமனைகளிலும் சென்று மருத்துவம் செய்வதற்காக கேட்டபொழுது படுக்கை வசதி இல்லை என்பதற்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த பெண்மணி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். மேலும் நோயால் அவதிப்பட்டு வாழ்வதற்கு உயிரிழப்பது மேல் என அப்பெண்மணி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அப்பெண்மணியின் கணவரிடம் இதன் உண்மை தன்மை குறித்து விசாரித்த பொழுது அவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாததால் தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறியுள்ளார்.
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…