TNAssembly - MKStalin [File Image]
சென்னை : சட்டப்பேரவை விவாதத்தில் அதிமுகவினர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்ற, சபாநாயகர் அப்பாவு அதிமுகவினருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். சட்டப்பேரவை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து Resign Stalin என்ற பதாகைகளை காட்டிஇபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா செய்தனர்.
இதையடுத்து, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், அமளியில் ஈடுபட்டதால் இன்று ஒருநாள் அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வர தடை விதித்தார் சபாநாயகர் அப்பாவு. பின்னர், சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வந்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என்பதில் நான் அக்கறை கொண்டவன். கள்ளக்குறிச்சி சம்பவம் என் கவனத்திற்கு வந்தது, நடவடிக்கை எடுத்துள்ளேன். அதிமுகவினர் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றம் செய்து பேரவை விதிகளுக்கும், மரபுகளுக்கும் மாறாக குழப்பம் ஏற்படுத்தியதால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டு, இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க விதித்த தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். பிரதான எதிர்க்கட்சிகளை விவாதத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று, சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்து அவை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.
பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக…
பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில்…
சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த…
ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என…
ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின்…
தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில்…