அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தொகுதி பங்கீடு குறித்து தேதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக, தேமுதிக உடன் இழுபறி உள்ள நிலையில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 3 மணி நேரம் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தினர். நேற்று முன்தினம் பாமக உடன் தொகுதிகளிலும் முடிந்த நிலையில் இன்று பாஜக மற்றும் தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், பாஜக சார்பில் 30 தொகுதிகள் கேட்கபட்டதாகவும், ஆனால் அதிமுக சார்பில் 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிக வாக்கு வங்கிகள் கொண்ட பாமகவிற்கே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், குறைந்த வாக்கு வங்கிகள் கொண்ட பாஜகவிற்கு பாமகவை விட குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…