செட்டிநாடு குழும நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!

By

சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

செட்டிநாடு குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020ல் வருமான வரி சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.700 வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதும் கண்டிபிடிக்கப்பட்டதை அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. எனவே, செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 6க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023