தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த 144 தடையை கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்திய்ய இராணுவமும் களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர தேவைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு சீர்மிகு காவல்துறை தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்து இருக்கிறது. அந்த அறிவிப்பில், சென்னையில் அவசர தேவைகளுக்காக பயணம் செய்வோருக்காக கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது என்றும், இதில், திருமணம், மருத்துவம் இறப்பு போன்றவற்றிற்காக வெளியூர் செல்வோர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொடர்பு எண்கள்: 7530001100 என்ற எண்ணில் வாட்ஸ ஆப் மற்றும் எஸ். எம். எஸ் மற்றும் gcpcorano@2020 gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். பயணத்திற்கு அனுமதி சீட்டு பெற விண்ணப்பிப்போர் கோரிக்கை கடித்தத்துடன் அடையாள ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…