இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பிரபல பீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் இளைஞர்கள், இளம்பெண்கள் என ஏராளமானோர் அங்கு நேரத்தை செலவிட வந்து செல்வது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது அங்கு பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பீனிக்ஸ் வளாகத்தில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் பணிபுரிந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்கு வேலை பார்த்த மற்றவர்கள் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளனர். மேலும் மார்ச் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் முக்கியமாக லைப்ஸ்டைல் கடைக்கு சென்றவர்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறி தெரிந்தால் உடனடியாக சென்னை கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இல்லையென்றால் தாங்களாகவே முன்வந்து சுய பரிசோதனை செய்யுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…
Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1…
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…
Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…
Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…