Categories: இந்தியா

சிபிஐ அதிகார மோதல்…!நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது…!மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

சிபிஐ அதிகார மோதல் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும்,  சி.பி.ஐ துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையேயான மோதல்தான் கடந்த ஒரு மாதங்களாக மத்திய அரசு அதிகாரிகள் மத்தியில் தலைப்பு செய்தியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சி.பி.ஐ என்ற அமைப்பையே நிலைகுலை வைத்தது.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் வழக்கு உட்பட முக்கிய வழக்குகளில் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா தலையிடுகிறார்.அந்த வழக்குகளின் விசாரணையை முடக்க அலோக் முயல்கிறார்” எனக் கடந்த மாதம் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியதுடன் மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கடிதமும் எழுதியிருந்தார் துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா.
இவருடைய கடிதம் தொடர்பாக பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அலோக் வர்மா, அஸ்தானா மீது ஆறு புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் திசை திருப்பவுமே அவர் என் மீது புகார் கூறுகிறார். அதில் உண்மையில்லை” என கூறினார்.

இந்நிலையில் இறைச்சி ஏற்றுமதி வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மா மீதும், ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக அஸ்தானா மீதும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

26 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

30 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

47 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

50 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

51 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago