Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில் காலத்தில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படும்.
கோடை காலங்களிலும், அதிக வேலை செய்வதன் மூலமும் உடல் தசைகள் சூடேறும் அதனால் அதிக வியர்வை சுரக்கிறது. வியர்க்கும் போது உடலில் உள்ள உப்பு சத்தும் வெளியேறுகிறது. மேலும் பயம் , பதட்டம் மற்றும் ஏதேனும் நோயின் முன் அறிகுறியின் காரணமாக கூட அதிக வியர்வை வரும் .
வியர்வை சுரப்பிகளில் எக்ரைன் ,அபோக்ரைன் என உள்ளது. இதில் எக்ரைன் வியர்வை சுரப்பி நம் பிறந்ததிலிருந்து இருக்கும். இது முகம், கை ,கால் பகுதிகளில்சுரக்கும் . இது நேரடியாக தோலின் மூலம் வியர்வை வெளியேற்றும் .
அபோகிரைன் சுரப்பி ரோமம் உள்ள பகுதிகளான அக்குள், பிறப்புறுப்பு மற்றும் மார்பு பகுதிகளில் சுரக்கும் .இது முடியின் வேர்க்கால் பகுதியில் சுரந்து முடியின் வழியாக வியர்வை வெளியேற்றும் போது ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த சுரப்பி ஆண், பெண்கள் பருவநிலையை அடைந்த பிறகு சுரக்கிறது .
காரமான உணவுகளையும் ,அதிக சூடான உணவுகளையும் தவிர்ப்பது அதிக வியர்வை சுரக்காமல் இருக்கும் .
இறுக்கமான ஆடைகளை அணியாமல், காற்றோட்டம் உள்ள பருத்தி ஆடைகளை அணியலாம் .பிறப்புறுப்பு மற்றும் அக்குள் பகுதிகளில் உள்ள ரோமங்களை மாதத்திற்கு இரண்டு முறையாவது அகற்ற வேண்டும்.
காலை நேரத்தில் அதிகமாக நீர் ஆகாரம், பழைய சாதம் கஞ்சி, திராட்சை போன்ற பழங்களை எடுத்துக் கொண்டால் அந்த நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.
அக்குள் பகுதியில் கற்றாழை ஜெல்லை இரவில் தடவி வரவும். சந்தனத்தை தண்ணீரில் கலந்து அக்குள் பகுதியில் தடவவும் .மேலும் மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து அக்குள் பகுதியில் தடவி வந்தால் அது பாக்டீரியாக்களை அழித்து வியர்வை ஏற்பட்டாலும் அதில் துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
இவற்றை இரவில் செய்து காலையில் குளித்து வர நாளடைவில் அதிக வியர்வை கட்டுக்குள் வரும் .மேலும் தினமும் குளிக்கும் போது சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து குளித்து வந்தால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.
ரசாயனம் கலந்த சென்ட் , நறுமணமூட்டப்பட்ட சோப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவதை விட நம் எளிமையான முறையில் வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி அதிக வியர்வையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…