அரசிற்கும், விவசாய சங்க தலைவர்களுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து!

அரசு எழுத்துபூர்வமாக தங்களது முடிவுகளை அளித்தபின், விவசாய  தலைவர்கள் அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவு செய்வார்கள்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் அதிக அளவில் கலந்து  கொண்டனர். இந்நிலையில், நேற்று  இரவு 7 மணிக்கு அமித்ஷாவுடன் 13 விவசாய சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை  ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நீடித்தது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் அகில இந்திய கிசான் சபை பொது செயலாளர்  ஹன்னன் மொல்லா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிசம்பர் 9ஆம் தேதி இந்திய அரசு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், புதிய சட்டங்கள் திருத்தம் செய்யப்படும் என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க தயார் என்று அமித்ஷா தங்களிடம் கூறியதாகவும், ஆனால் எங்களுக்கு இந்த சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்பதே கோரிக்கை என்றும் அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய அரசு எழுத்துபூர்வமாக தனது முன்மொழிவு அளித்த பின்பு, வேளாண் அமைப்பு தலைவர்கள் தங்களது அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவு செய்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

2 mins ago

இந்த வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்.. டூ பிளெசிஸ் பெரும் மூச்சு!

IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…

29 mins ago

‘ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது’ – டேனியல் வெட்டோரி

Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…

58 mins ago

தேர்தல் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி.! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…

1 hour ago

இப்படி செய்தால் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்… எச்சரிக்கும் வாட்ஸ்அப்.!

WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…

1 hour ago

கேரளாவில் மும்முனை போட்டி… களத்தில் 194 வேட்பாளர்கள்.. வாக்குபதிவின் தற்போதைய நிலவரம்!

Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…

2 hours ago