#BREAKING: துப்பாக்கி சூடு வழக்கு.. 64 பேர் ஆஜர்.. ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக இன்று 64 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக இன்று 64 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த போராட்டம் தொடர்பாக 101 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று 64 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற தலைமை நீதித்துறை நீதிபதி பசும்பொன் சண்முகையா ஒத்திவைத்தார்.

Leave a Comment