குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகமதாபாத்தில் ஆளுநர் மாளிகை சென்ற அவர், ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
மேலும், அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தானே முதல்வராக நீடிக்கபோவதாகவும், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குஜராத்தை பொறுத்தவரையில், அம்மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முதுகெலும்பாக காணப்படுகிறது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தேர்தல் நடவடிக்கைகள் காரணமாகவும், தனது தனிப்பட்ட உடல்நிலை காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், விஜய் ரூபானி ராஜினாமா குறித்து கட்சி தலைமை சார்பாக எந்த அதிகாரபூர்வ வெளியிடப்படவில்லை. ஆனந்தி பென் படேலுக்கு பின், விஜய் ரூபானி 2016-ஆம் ஆண்டு முதல் குஜராத் முதல்வராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…