அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்ய புதிய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது
குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், புதிய சட்டம் மூலம் இந்தியாவின் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கும் தடை விதிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கவுள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் புதிய கிரிப்டோகரன்சியை வழங்குவதற்கான புதிய சட்ட மசோதா வழிவகை செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை 2021 சட்ட மசோதா என பெயரிடப்பட்டுள்ளது.
நவம்பர் 29 தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ள மசோதாக்கள் பட்டியலில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…