தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த வரும் 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நிரந்தர பணிக்கு மாற்றப்பட்ட 1,212 செவிலியர்கள் சென்னையில் கொரோனா பணியில் ஈடுபடவுள்ளனர். பின்னர் தங்களது மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
ரூ.15,000 சம்பளம் பெற்று வந்த செவிலியர்களுக்கு இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 1,212 செவிலியர்களுக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடிவடைந்த நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் வரும் 10ஆம் தேதி முன்னதாக 1,212 பேரும் சென்னையில் பணியில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 2015-16ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தர செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக அரசிடம் தொடர்ந்து செவிலியர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…