காலை சிற்றுண்டி, மாலை தானியங்கள்.! அசத்தும் முன்னாள் மாணவர்கள்.!

  • புதுக்கோட்டையில் அரசு மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், மாலையில் தானியங்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10, 11,12-ம் வகுப்புகளில் சுமார் 120  மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் பள்ளி, மருத்துவமனை, குடிநீர் வசதி போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னாள் மாணவர்கள் அவர்களது பங்களிப்பை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் அரசு மேல்நிலை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்  கழகத்துடன் இணைந்து முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மேம்பட பள்ளியில் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், மாலையில் தானியங்கள் மற்றும் பிஸ்கெட் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் கூறுகையில், 10, 11,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் காலையில் பள்ளிக்கு வரும் போது சிலர் சாப்பிடாமலேயே வருவதால் சோர்வடைந்து விடுகிறார்கள். இதை காரணமாக கொண்டு அவர்கள் சோர்வடையாமல் இருக்க தினமும் இட்லி, பூரி மற்றும் பொங்கல் என காலை உணவுகளை வழங்கி வருகிறோம். மேலும் மாலை 6 மணி வரை மாணவர்கள் பள்ளியில் படிப்பதால்  அவர்கள் களைப்படையாமல் இருக்க ஒவ்வொரு நாளும் தானியங்கள் அதனுடன் சேர்த்து பிஸ்கெட் கொடுத்து வருகிறோம்.

இந்த திட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியோடு வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு நாளுக்கு சுமார் ரூ.2300 வரை செலவாகிறது. இதற்காக கிராம மக்களும் தங்களது பங்களிப்பை போட்டிபோட்டு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்று கிராம மக்கள் பங்களிப்பை செய்தால் நிச்சியமாக படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் மற்றும் மதிப்பெண் உயரும் என தெரிவித்தனர்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…

2 mins ago

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

18 mins ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

32 mins ago

இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…

39 mins ago

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

2 hours ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

2 hours ago