பிரேசில் ,உலகின் மூன்றாவது பெரிய இயேசு சிலையை அதன் என்கான்டாடு நகரில் கட்டி வருகிறது.
பிரேசில் நாடானது,’க்றிஸ் தி ப்ரொடக்டர்’ என்ற பெயரில் 141 அடி உயரத்தில் ஒரு பிரமாண்டமான இயேசு சிலை அதன் என்கான்டாடு நகரில் கட்டி வருகிறது.இந்த சிலையானது பிரேசிலின், ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள 98 அடி உயர ‘ரிடீமிர்’ இயேசு சிலையைக் காட்டிலும் உயரமான அளவில் கட்டப்படுகிறது.2 கோடியே 60 லட்சத்தில் உருவாகும் இந்த சிலைக்கு ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட சிலையின் பணிகளில் தற்போது கை மற்றும் கால்கள் இணைக்கப்பட்டுள்ளன.மேலும்,இயேசு சிலையின் உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் மூலம் பார்வையாளர்கள் மேலே சென்று,சிலையின் இதயத்தின் வழியே வெளியேறி 132 அடி உயரத்தில் இயற்கையை ரசிக்கும் வண்ணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து,சிலையை கட்டி வரும் ‘தி அசோசியேஷன் ஆஃப் ப்ரண்ட்ஸ் ஆப் கிறிஸ்’ என்ற நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் சிலை திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
உலகின் முதல் உயரமான இயேசு சிலையானது இந்தோனேசியாவின் சுலவேசி பகுதியில் உள்ளது.இதன் உயரம் 52.55 மீட்டர் ஆகும்.
இரண்டாவது உயரமான சிலை போலந்து நாட்டில் 52.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதன் வரிசையில் தற்போது மூன்றாவது உயரமான இயேசு சிலையாக பிரேசிலில் கட்டப்பட்டு வரும் க்றிஸ் தி ப்ரொடக்டர் சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…