நெருங்கி வரும் சுதந்திர தினம்..ஊடுருவ முயன்ற நபரை சுட்டு கொன்ற எல்லை பாதுகாப்பு படை.!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அருகிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு வேலி மீது இன்று  ஒரு பாகிஸ்தனை சார்ந்த ஒரு நபர் ஊடுருவ முயன்றபோது எல்லை பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் வேலியைக் கடந்து மறுபுறம் சென்றபோது  வீரர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, அவர் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார். பின்னர், அந்த பகுதியைத் தேடியபோது  அந்த நபர் இறந்து கிடந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அதிகாலை 1 மணியளவில் எல்லையில் உள்ள பகாசர் பகுதியில் நடந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு  எல்லை பாதுகாப்பு படை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊடுருவ முயன்ற நபரை அடையாளம் காணுமாறு பாக்கிஸ்தான் ரேஞ்சர்களிடம்  எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கேட்டுள்ளது என்றும், பாகிஸ்தான் பதிலளித்த பின்னர் அவர் குறித்து மேலும் விவரங்கள் கிடைக்கப் பெறும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பாக்கிஸ்தான் தரப்பில் நடமாட்டத்தை எல்லை பாதுகாப்பு படை கவனித்து வருகிறது என கூறினார்.

murugan

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

2 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

3 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

3 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

3 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

4 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

4 hours ago