ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் அதிபர் அஷ்ரஃப் கனி பதவியேற்றுக்கொண்டு இருக்கும்போது திடீரென அடுத்தடுத்து வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருந்த அஷ்ரப் கானி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா போட்டியிட்டார். கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிபர் அஷ்ரப் கனி 923868 (50.64%) வாக்குகளை பெற்று 2வது முறையாக அதிபரானார்.
இந்நிலையில் இன்று பதவி ஏற்பு விழா காபூலில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. அதிபராக அஷ்ரஃப் கனி பதவிப்பிரமாணம் ஏற்கத் துவங்கும் போது அருகில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் மக்கள் அலறி அடித்து ஓடினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால் அதிபருக்கு எதுவும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…