கொரோனாவால் உயிரிழந்த சிறுபான்மையினர்களையும் அவர்களின் மத சடங்கு எதிராக எரிக்கும் இலங்கை அரசை பாகிஸ்தான் பிரதமர் கண்டித்ததை அடுத்து தங்கள் முடிவை இலங்கை அரசு மாற்றிக்கொண்டுள்ளது.
பொதுவாக இந்துக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மதத்தினர் எரிக்காமல் புதைப்பது தான் அவர்களின் மத வழக்கம். ஆனால் கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைப்பதால் அது நிலத்தடி நீரில் கலந்து தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் சிலர் கூறியதை அடுத்து இலங்கையில் கொரோனவால் உயிரிழக்கும் அனைவரையுமே எரிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுபான்மையினராகிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மத வழக்கத்திற்கு இது எதிரானதாக இருப்பதாக பல வகையில் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும், இதற்கு ஐநா மனித உரிமை ஆணையமும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து இலங்கைக்கு சுற்றுப் பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள், இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசி உள்ளார். அப்பொழுது சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் எனவும், சடலம் எரிக்கப்படுவது இஸ்லாம் மதம் ஏற்கவில்லை எனவும் இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக பின்பற்றி வந்த தங்களின் நடைமுறையை மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பான சட்டத்தையும் தற்பொழுது மாற்றியுள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…