விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவருக்கு ப்ளூ கார்னர் நோட்டிஸ்.
நடிகர் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், முரளிதரன் இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்களவர்களுக்கு ஆதரவாக பேசியதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியது.
பலரின் எதிர்ப்புக்கு மத்தியில், விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரது மகளுக்கு ட்வீட்டர் மூலமாக ரித்திக் என்பவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் இலங்கையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ரித்திக்கை கைது செய்ய இண்டர்போல், புளு கார்னர் நோட்டிஸ் அனுப்ப இருக்கிறது. இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்ட பின், அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
புளு கார்னர் நோட்டிஸ் என்றால் என்ன?
புளு கார்னர் நோட்டிஸ் என்பது, சர்வதேச காவல்துறையால் அனுப்பப்படும் விசாரணை நோட்டிஸ் ஆகும். இந்த நோட்டிஸ் கிரிமினல் குற்றம் செய்துவிட்டு, தலைமறைவாக இருப்பவரை கண்டுபிடிப்பது அல்லது அடையாளம் காண கொடுக்கப்படும் நோட்டிஸ் ஆகும்.
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…
Election2024 : மக்களவை தேர்தலில் உ.பி மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த…