Categories: Uncategory

ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கப்போகுது. காலி பணியிடங்களை நிரப்ப ரெயில்வே முடிவு!

ரெயில்வே துறையில் பாதுகாப்பு பிரிவில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரெயில்வேயில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நேரிட்டதை அடுத்து  விபத்துக்களுக்கு பொறுப்பேற்று  சுரேஷ் பிரபு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதும் பியுஷ் கோயலுக்கு ரெயில்வேதுறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ரெயில்வே துறையில் பல ஆண்டுகளாக பாதுகாப்பு பிரிவஇல் காலியாக இருக்கம் ஒரு லட்சம் பணி இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்கும் வகையிலும், புதியதொழில்நுட்பங்கள், கருவிகளைப் புகுத்த அதிகமான பணியாட்கள் தேவைப்படுவதையொட்டி இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
ரெயில்வே துறையின் மண்டல மேலாளர்கள், வாரியக் குழு உறுப்பினர்கள் இடையிலான கூட்டம் காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.அப்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமான முடிவு என்பது,  ரெயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
 பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையாக இந்திய பெரிய முடிவுக்கு ரெயில்வேஅமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது.
 இதன்படி, ரெயில்வே பாதுகாப்பு பிரிவில் ஜூனியர்  மற்றும் சீனியர் பொறியாளர்கள் நியமித்தல், துணை ரெயில்நிலைய அதிகாரி,பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் 50 சதவீதம் பதவிகள் சி பிரிவில் வருகிறது. இந்த பதவிகள்அனைத்தும் ரெயில்வே வேலைவாய்ப்பு தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்படும். மேலும், குரூப் டி பிரிவில் 50 சதவீதம் ரெயில்வே தேர்வு வாரியம் மூலமும், மற்றவை ரெயில்வே வேலைவாய்ப்பு பிரிவு மூலமும் நிரப்பப்படும் எனச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் வெளிவரும் தைனிக் ஜாக்ரன் நாளேடு வெளியிட்டுள்ளது.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

5 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

6 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

11 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

11 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

12 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

12 hours ago