இஸ்லாமாபாத்: ”அணு அணுகுண்டு சோதனை நடத்தாமல் இருப்பதற்காக, அப்போதைய அமெரிக்க அதிபர், பில் கிளிண்டன், எங்களுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் தர முன் வந்தார்,” என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி, அந்நாட்டில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட்டில், நவாஸ் ஷெரிப் பேசியதாவது: எதிர்க்கட்சிகள் என் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றன; வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகவும் பிரசாரம் செய்கின்றன; இதில், துளியும் உண்மை இல்லை. வாஜ்பாய், இந்திய பிரதமராக இருந்தபோது, 1998ல், அந்த நாட்டின் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது; இதற்கு பதிலடியாக அடுத்த சில நாட்களிலேயே பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனை நடத்தி, தன் பலத்தை உலகிற்கு அறிவித்தது. அப்போது, அணுகுண்டு சோதனை செய்யாமல் இருப்பதற்காக, அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், எங்களுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க முன் வந்தார். அதை நான் செய்தால், என் தாய் நாட்டிற்கு துரோகமிழைத்தவன் ஆகி இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…