மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த துறையூரை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவரது மனைவி அம்பிகா(24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முருகனின் தந்தை பெரியசாமி(59), ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன், வீட்டில் தனியாக இருந்த அம்பிகாவிடம், பெரியசாமி பாலியல் ரீதியாக தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.அப்போது அம்பிகா சத்தம் போடவே, அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வந்து, பெரியசாமியை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த அம்பிகாவிடம் பெரியசாமி தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதற்கு அம்பிகா இணங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த பெரியசாமி, அங்கு கிடந்த இரும்பு ராடை எடுத்து அம்பிகாவின் தலையில் பலமாக தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அம்பிகா உயிரிழந்தார். பெரியசாமி அங்கிருந்து ஓடிவிட்டார். மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அம்பிகாவின் மகன் ஜோதிமணி, ரத்த வெள்ளத்தில் தாய் இறந்து கிடந்தது கண்டு கத்தினான். அப்பகுதியினர் அளித்த புகாரின்பேரில் கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிந்து பெரியசாமியை தேடி வருகின்றனர்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…